சிறுவர் கதைகள்

                                                     
                                                        கலைமானும்  கரடியும் 
 

       கலைமான் ஒன்று தான் இரண்டு குட்டிகளுடன் அடர்ந்த காட்டுக்குள் இறை தேடி அலைந்து  கொண்டிருந்தது. மாலை நேரத்த்தில் இருப்பிடம் திரும்பும் வேலை வந்ததும், குட்டிகளை அழைத்துக்கொண்டு புறப்பட்டது.

அப்போது கலைமான் குட்டிகளில் ஒன்று காட்டுக்குள் வழி தவறி விட்டது.அந்தக் காட்டுக்குள் சிறிது தூரம் தான் தாயை தேடியது. ஆனால் தாயையும், உடன் பிறந்த மற்றொரு குட்டியையும், அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் அது காட்டின் ஒரு ஓரமாக நின்று கண்களில் கண்ணீர்
பொங்க அழுது கொண்டிருந்தது. அந்த  நேரத்தில் அந்த  வழியாக கரடிக்  குட்டி ஒன்று அங்கு வந்தது. அது கலைமான் குட்டியிடம் எதற்காக அழுகிறாய், என்று கேட்டது . 

கலைமான் குட்டியும் தன் சோகக் கதையைக் கூறியது. பரிதாபம் கொண்ட கரடிக்குட்டி, கலைமான் குட்டியை தன்னுடன் தான் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றது. 



 இரண்டும் நண்பர்களாக இருந்து  தங்களின் சிறு வயது காலத்தை கரடிக்குட்டியும், கலைமான் குட்டியும் சந்தோஷமாக கழித்து வந்தன.

  கலைமான் வளர வளர அதற்கு அழகிய கொம்பு முளைத்தது . அதன் காரணமாக அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக தோன்றியது. கலைமானைப் பார்த்த மற்ற விலங்குகள் அதன் அழகை பாராட்டிச் சென்றன. இதனால் கலைமானுக்கு கர்வம் உண்டானது.

 அது மற்ற எந்த விலங்குகளையும் மதிக்காமல், ஏளனமாகப் பார்க்கத் தொடங்கியது. இதுனால் வரை தனக்கு அடைக்கலம் கொடுத்து , தன்னுடன் உயிருக்கு உயிராக பழகி வந்த கரடியிடமும் அது  தன் அழகின் கர்வத்தைக் காட்ட ஆரம்பித்தது . 
    
கரடியே! நீ  என்னைப்போல் அழகாக இல்லை. உன் முகத்தைப் பார்க்கவே  அசிங்கமாக இருக்கிறது. ஆனால் என்னைப் பார், இயற்கையிலேயே அழகான எனக்கு , இப்போது வளர்ந்துள்ள கொம்புகள் மேலும் அழகு சேர்க்கின்றன.  இப்போது உன்னை என் நண்பன் என்று சொல்லிக்கொள்ளவே எனக்கு வெட்கமாக இருக்கிறது . எனக்கு நண்பனாக இருக்க, என்னைப் போல் அழகு படைத்தவறே தகுதியானவர்கள்.உனக்கு அந்தத் தகுதி கொஞ்சமும் இல்லை, என்றது கலைமான். 

இதைக்கேட்ட கரடிக்கு முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இருந்தாலும் அதனை வெளியேக் காட்டிக் கொள்ளாமால்

 'கலைமானே! உனக்கு உன் கொம்புகள் மிகுந்த அழகுதான். அதை நானும் ஒப்புக்கொள்கிறேன் . அது மட்டுமல்லாது, என் நண்பன் மிகவும் அழகானவன் என்பதும் எனக்கும் தானே பெருமை ! என்றது பெருந்தன்மையுடன். 

ஆனால், உன்னை என் நண்பன் என்று சொல்லிக்கொள்வது எனக்கு அசிங்கமாக இருக்கிறது . நான் தனியாக வாழ முடிவு செய்துவிட்டேன், என்று கூறியபடி கலைமான் அங்கிருந்து புறப்பட்டு போய்விட்டது. 

இது நாள் வரை தன்னோடு ஒருமையாக வாழ்ந்த மான்,  பிரிந்து போவதைக் கண்டு வேதனையில் துடித்தது கரடி. இருப்பினும் மனதை
தேற்றிக்கொண்டது. 

ஒரு நாள் கலைமான், இறை தேடுவதற்காக வெளியில் சென்றது . அப்போது மரம் ஒன்றில் இருந்த சிறுத்தை , கலைமானை வேட்டையாட துரத்தியது.

 சிறுத்தைக்கு பயந்து தலைதெரிக்க ஓடிய கலைமானின் தலை ஒரு மரத்த்தின் கிளைகளுக்கு இடையில் வசமாக மாட்டிக்கொண்டது . எவ்வளவு முயன்றும் அதன் தலை வெளியே வரவில்லை தன் முழு பலத்தினை  கொண்டு கலைமான் தலையை வெளியே எடுக்க முயன்றது . இறுதியில் அதன் கொம்புகள் முறிந்து தலை வெளியே வந்தது. 

 கொம்புகள் ஒடிந்து போனதால் கலைமான் பார்ப்பதற்கே அசிங்கமாக தோற்றம்  அழித்தது.  இதைப் பார்த்த மற்ற விலங்குகள் கேலிபேசி சிரித்தன.

 கலைமான் அழகிழந்து பழைய படி கரடியிடமே சென்றது . கரடியோ , கலைமானுக்கு நடந்ததைக் கேட்டு வருந்தியது.

 மானே ! அழகு என்பது எப்போதும் நம்முடன் இருக்கப்போகிற சொத்தில்லை.
 வயதாக வயதாக அது நம்மை விட்டு விலகுவது உறுதி. உனக்கு கொஞ்சம் விரைவாக  போய்விட்டது. இதற்காக வருந்தாதே  என்று கலைமானை தேற்றியது  கரடி. கரடியின் பெருந்தன்மையைக்  கண்டு வெட்கத்தில்  தலை குனிந்த  கலைமான், அதனிடம் மன்னிப்பு கேட்டது. 

இருவரும் பழையபடி  நண்பர்களாக வாழத்தொடங்கினர்.