முல்லா கதைகள்



                                                              முன் யோசனை முல்லா



ஒரு நாள் முல்லா அதிக விலை கொடுத்து ஒரு மண்பானை வாங்கி வந்தார்.அந்தப் பானையை ஒரு நாள் தன்னிடம் வேலை பார்க்கும் சிறுவனிடம் கொடுத்து அருகிலிருந்த கிணற்றுக்குச் சென்று நீர் எடுத்து வருமாறு கூறினார்.

அந்தச் சிறுவன் பானையை வாங்கிக்கொண்டு கிளம்பியபோது முல்லா அவனை நோக்கி,

''பானையை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். ''பானையை நீ உடைத்துவிட்டால் உனக்கு சரியான அடி கிடைக்கும்'' என்றார்.


அப்போது மண் பானையை எடுத்துக்கொண்டு சென்ற சிறுவனை முல்லா திரும்ப அழைத்தார்.அவர் அருகே பையன் வந்ததும்,பையனுடைய முதுகில் ஓங்கி ஓர் அறை வைத்தார்.திகைத்துப்போனசிறுவன் முதுகைத் தடவிக்கொண்டே,

''பானையை உடைத்தால் தானே அடி கொடுப்பதாகச் சொன்னீர்கள்,இப்போது ஏன் அடித்த்தீர்கள்? எனக் கேட்க,

அதற்க்கு முல்லா ''சிறுவனே நீ பானையை உடைத்த பிறகு உனக்கு அடிகொடுத்து என்ன பயன்? உடைந்து போன பானை திரும்ப வருமா? அதனால்தான் முன்னதாகவே அடி கொடுத்தேன்" என்றார்.